டெல்லி முதல்வரும் “இந்தியா” கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளும் கருத்துகளை பகிர்ந்துள்ளது. இதையடுத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம் என்ற குற்றச்சாட்டையும், நாங்கள் கண்காணித்து வருகிறோம். இந்த பிரச்சனைக்கு நியாயமான, வெளிப்படையான சட்டச் செயல்முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 1 தேர்வில் பாஸாக எளிய வழி இதோ.. மிஸ் பண்ணிடாதீங்க!!!