இந்தியா முழுவதும், கோடை வெயிலின் தாக்கமானது கடந்த சில மாதங்களாகவே சராசரியை விட அதிகரித்து வருகிறது. இந்த வெயிலின் கொடுமையால் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால், தான் ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரசு முன்கூட்டியே கோடை விடுமுறை அளித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது தென்னிந்திய மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை முடிந்து, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், மீண்டும் பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அப்போது கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து, பள்ளி தொடங்கும் நாளில் மாற்றம் ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், கோடை விடுமுறை குறித்து பின்வருமாறு காணலாம்.
தமிழகத்தில் மகளிர் இலவச பேருந்து திட்டம் கிடையாது?? வெளியான அதிர்ச்சி தகவல்!!!
- தமிழ்நாடு – ஏப்ரல் 29 முதல் ஜூன் 1 வரை (6 முதல் 12ம் வகுப்பு வரை), ஜூன் 5 வரை (5ம் வகுப்பு வரை)
- கேரளா – ஏப்ரல் 2 முதல் ஜூன் 1 தேதி வரை
- மத்திய பிரதேசம் – மே 1 முதல் ஜூன் 15 வரை
- ஆந்திரப் பிரதேசம் – மே 1-ம் முதல் ஜூன் 12-ம் வரை
- மகாராஷ்டிரா – ஏப்ரல் 21 முதல் ஜூன் 15 வரை
- ஒடிசா – ஏப்ரல் 19 முதல் ஜூன் 18 வரை
- உத்தரப்பிரதேசம் – மே 21 முதல் ஜூன் 20 வரை
- ஜார்கண்ட் – மே 21 முதல் ஜூன் 10 வரை