கொலைவழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று 14 வருடம் சிறையில் கழித்து தற்போது மருத்துவர் ஆகியுள்ள இளைஞர் ஒருவரின் கதை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
சபாஷ் சுபாஷ் பாட்டில்..!
கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டம் அப்சல்புராவை சேர்ந்த சுபாஷ் பாட்டில் என்ற இளைஞர் 1997ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ளார். அவர் படிப்பில் 3 ஆண்டுகளை கடந்திருந்த போது 2002ம் ஆண்டு நடந்த ஒரு கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். இதனால் அவரது படிப்பு தடைபட்டது. மேலும் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
விடாமுயற்சி..!
சிறையிலும் மருத்துவம் தொடர்பான பணிகளையே சுபாஷ் செய்து வந்து உள்ளார். பின்பு 14 வருடம் ஆயுள் தண்டனை சிறைவாசம் முடிந்து கடந்த 2016ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த பின்பு மருத்துவ படிப்பில் தொடர அனுமதி பெற்ற அவர் பாதியில் நின்ற படிப்பை மீண்டும் தொடங்கி முழுவதும் ஆக படித்து முடித்தார்.
2019ம் ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மருத்துவ பட்டம் பெற்றார். டாக்டர் ஆக வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை விடாமுயற்சியால் வென்று வாழ்வில் முடங்கிப்போய் கிடக்கும் பலருக்கும் அவர் உதாரணமாக திகழ்கிறார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |