தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ம் ஆண்டு நடத்திய 8,888 காவலர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளது எனவும் அதற்கு சிபிஐ விசாரணை கோரியும் உயர்நீதிமன்றத்தில் 15 விண்ணப்பதாரர்கள் புகார் மனு அளித்து உள்ளனர்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
குரூப் 4 முறைகேடு எதிரொலி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலியாக தற்போது அரசு தேர்வாணையங்கள் நடத்திய பல்வேறு தேர்வுகளில் (குரூப் 2, குரூப் 2A, VAO, போலீஸ் துணை ஆய்வாளர்) முறைகேடு நடைபெற்றதாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
2012 குரூப் 2 தேர்வில் முறைகேடா..? விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!
காவலர் தேர்வில் முறைகேடு..!
இந்நிலையில் 2019ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத் துறை மற்றும் சிறை வார்டன் உள்ளிட்ட 8,888 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக 15 விண்ணப்பதாரர்கள் புகார் அளித்துள்ளனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்த தேர்வுக்கான தற்காலிக தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1019 பேரும், விழுப்புரத்தில் இருந்து 763 பேரும் தேர்வாகி உள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களில் தேர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தேர்வில் இடஒதுக்கீடு முறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இது குரூப் 4 முறைகேட்டை விட பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |