ஏய்., பிடிடா பிடிடா.., கஞ்சா போதையில் நிற்க முடியாமல் தவித்த மாணவர்கள்.., அரக்கோணம் ரயில் ஸ்டேஷனில் நடந்த சம்பவம்!!

0
அரக்கோணம் ரயில் ஸ்டேஷனில் நடந்த சம்பவம்

தற்போதைய காலகட்டத்தில் போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வரும் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் தினசரி நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. எனவே இந்த ஸ்டேஷனில் உள்ள எல்லா நடை மேடைகளிலும் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

அப்படி மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இரண்டு ஐடிஐ மாணவர்கள் சரியான கஞ்சா போதையில் தண்டவாளத்தைக் கடக்க முடியாமல் கீழே விழுந்து தட்டு தடுமாறி நடந்து வந்தனர். அதில் ஒரு மாணவன், அங்கு செல்லவிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் சென்று படுத்து கொண்டு எழாமல் இருந்துள்ளார். இதனைப் பார்த்து ஷாக்கான பயணிகள் அவர்களை மீட்டு நடைமேடைக்கு அழைத்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறை மாணவர்களை கண்டித்து விரட்டி அடித்தனர். அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here