எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் தற்போது கொரோனவிக்ரு எதிரான முதல் தடுப்பூசியை இன்று செலுத்தியுள்ளார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்டாலின்:
தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மிக மும்மரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் தொகுதி பங்கீடு குறித்த முடிவுகள் என செம பிசியாக இருந்து வருகிறார் ஸ்டாலின். இந்நிலையில் ஸ்டாலின் தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொரோனாவிற்கு எதிரான தனது முதல் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு எதிரொலி – மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி!!
இதனை தனது ட்விட்டர் பக்கம் மூலம் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கேப்ஷனும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
#CovidVaccine முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.
குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம். pic.twitter.com/45L1iGD1F6
— M.K.Stalin (@mkstalin) March 9, 2021