குழந்தையுடன் பெண் காவலர் செய்த செயல் – விசாரணை நடத்த அரசு முடிவு!!

0

சண்டிகர் மாநிலத்தில் பெண் போக்குவரத்து காவலர் செய்த ஓர் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இது குறித்து பெண் காவலரிடம் விசாரணை நடத்த சண்டிகர் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர் பிரியங்கா:

சண்டிகர் மாநிலத்தில் பிரியங்கா என்னும் பெண் காவலர் ஒருவர் போக்குவரத்து துறையில் பணி புரிந்து வருகிறார். இவர் தனது பணியில் மிக மும்மரமாக ஈடுபட்டு இருந்துள்ளார். மிக நேர்மையாகவும், கண்ணியமாகவும் தனது பணிகளை செய்து வந்துள்ளார் பிரியங்கா. தற்போது சில தினங்களுக்கு முன்பு இவர் செய்த காரியத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதற்கான விடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் என்ன செய்தார் என்றால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பணியில் பிரியங்கா ஈடுபட்டுள்ளார் பிரியங்கா. அப்போது சாலை கட்டுப்பாட்டில் தனது பச்சிளம் குழந்தையை கையில் ஏந்திய படி பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கு சென்ற வாகன ஓட்டிகள் தங்களது போனில் பதிவு செய்து அதனை இணையத்தில் வெளியிட்டனர்.

‘அஸ்வின் கையால இந்த அவார்ட் வாங்குனது ரொம்ப ஸ்பெஷல்’ – கண்கலங்கும் ஷிவாங்கி!!

தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் அறிந்த சண்டிகர் போக்குவரத்துத்துறை இதுகுறித்து பிரியங்காவிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. பிரியங்கா தனது பச்சிளம் குழந்தையுடன் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று சக பெண் போக்குவரத்து காவலர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க பிரியங்கா மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here