மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் SSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் மத்திய ஆயுதக் காவல் படைகள், எஸ்எஸ்எஃப் உள்ளிட்ட 75,768 GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பம் வருகிற நவம்பர் 24 முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 2024 பிப்ரவரி மாதம் தேர்வு நடத்த இருப்பதாகவும் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்காக கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டணம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ssc.nic.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள தேர்வாணைய அறிவிப்பையும் பார்த்து கொள்ளலாம்.