இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே கோலாகலமாக நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியானது நேற்று (நவம்பர் 19) நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்துடன் விளையாடி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 6வது முறையாக உலக கோப்பையை வென்று ஆஸ்திரேலிய அணி அசைக்க முடியாத சாதனையை படைத்துள்ளது. இந்திய அணியோ, இந்த ஒரு நாள் உலக கோப்பையில் அனைத்து போட்டிகளையும் வென்ற போதிலும், இறுதிப் போட்டியை வெல்ல தவறியதால் கோப்பையையும் இழந்தது.