கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டு வருகிறது. இதனால் உற்பத்தி பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், வாழ்க்கை சூழலில் போராடும் தொழிலாளர்களுக்கு சற்று நிவாரணம் வழங்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதன்படி வறுமையில் வாடும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமான ரூ.12,500லிருந்து 40 சதவீதம் அதிகரித்து ரூ.17,572ஆக உயர்த்த, இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் ரூ.17,572 என்ற குறைந்தபட்ச ஊதியத்தை பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
OTT இல் கலக்க வரும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம்…., எப்போது தெரியுமா??