CUET நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.., பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..
நாடு முழுவதும் மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உயர்நிலைப் படிப்பை மேற்கொள்வதற்கு பல்வேறு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமான ஒன்றாக உள்ளது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பு மேற்கொள்ள CUET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் பலரும் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் உள்ளதால் இதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீடித்துள்ளனர். மேலும் இந்த விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏப்ரல் 3ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here