தற்போது நாட்டில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா. இதனால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல் நலம் தேறி வருவதாக தகவல் அளித்துள்ளார்.
எஸ்.பி.பி
தமிழ் திரையுலகில் பின்னணி பாடகரான எஸ்பிபி.பாலசுப்ரமணியம் கொரோனவால் பாதிக்கப்பட்டு அமைத்தக்கரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மயக்கநிலையில் இருந்த எஸ்.பி.பி தற்போது மீண்டு வந்துள்ளார். இவருக்கு பிளாசம் அசிகிச்சை அளிக்கப்பட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு வழங்கப்பட்ட செயற்கை சுவாச அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை நல்ல பலனை தருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து எஸ்.பி.பி மகனான சரண் வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது, “எனது தந்தையில் உடல் நலம் சீராக உள்ளது, அவருக்காக வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.