தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்துள்ள காரணத்தால் தற்போது வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. மேலும் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிகழ்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. எனவே கேரளாவில் ஜூன் 1ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்து உள்ளார்.
இதனால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மழைப் பகுதியை ஒட்டியுள்ள நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வரும் மே 31ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், மன்னர் வளைகுடா பகுதியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |