தற்போதைய பிசிசிஐ அமைப்பின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கங்குலியின் உடல் நிலை நன்றாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடல் நல குறைவு
முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிசிசிஐ அமைப்பின் தலைவருமான சௌரவ் கங்குலி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் என்று ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சையின் போது அவருக்கு நெஞ்சில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 5 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமாகி வீடு திரும்பினார்.
மாட்டுவண்டியில் தாய்மாமன் சீர்வரிசை – சினிமா பாணியில் கோலாகலமாக நடந்த பூப்புனித நீராட்டு விழா!!
இதனை அடுத்து மீண்டும் அவருக்கு கடந்த புதன்கிழமை நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவரது உடல் நலன் குறித்து தற்போது மருத்துவ வட்டாரங்கள் கூறியதாவது, “தற்போதைய பிசிசிஐ அமைப்பின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கங்குலிக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறோம். அவருக்கு தலைசுற்றலுடன் நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் நலமுடன் தான் இருந்து வருகிறார். கூடிய விரைவில் அவர் வீடு திரும்புவார்” இவ்வாறாக தெரிவித்துள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.