கொரோனா வைரஸ் பல்வேறு வழிகளில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. ஒரு முறை கூட பாதிக்காதவர்கள் கூட இரண்டாவது அலையில் சிக்கியுள்ளனர். இதனால் தற்போது அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திய வண்ணம் உள்ளனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
கொரோனா முதல் டோஸ்:
கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள், அரசியல் வாதிகள் அனைவரும் தடுப்பூசின் முதல் இரண்டு டோஸ்களை போட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 90 களில், அஜித், விஜய் ,உள்பட பல பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை சிம்ரன் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் அவரை தொடர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும், அருண் விஜய் கொரோனாவிற்கு எதிரான முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
இப்போது ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!