தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ். தற்போது தனுஷிற்கு வந்த படவாய்ப்பினை சிவகார்த்திகேயன் பிடிங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன்:
சின்னத்திரையில் இருந்து தனது அபார திறமையின் காரணமாக வெள்ளித்திரைக்கு சென்றவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் இவரது இந்த வளர்ச்சிக்கு தனுஷும் முக்கிய காரணம் என்றே சொல்லலாம். காரணம் சிவகார்த்திகேயன் நடித்து அபார வெற்றி அடைந்த எதிர்நீச்சல் படம் தனுஷிற்காக தயாரித்த கதையாம். ஆனால் தனுஷ் இதனை சிவகார்திகேயனிற்கு மாற்றியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் சில மாதங்களுக்கு பின்பு இவர்கள் இருவருக்கு இடையே சில இன்னல்கள் கிளம்பியது. இதனால் இரு தரப்பினரிடம் இருந்து பல விமர்சன கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது. தற்போது இதனை தொடர்ந்து மேலும் ஓர் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் தற்போது சிவகார்த்திகேயன் டான் படத்தில் பிசியாக இருந்து வருகிறார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
விஜய்க்கு அப்ளிகேசன் போடும் தெலுங்கு இயக்குனர் – அப்போ இனி டபுள் ட்ரீட் தான்! குஷியில் ரசிகர்கள்!!
இந்த திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார். முதலில் இந்த கதையை சிபி சக்கரவர்த்தி தனுஷின் ஆஸ்தான நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் கூறினார். அதற்கு அந்த நிறுவனம் தனுஷை வைத்து இந்த படத்தை செய்யலாம் என்று கூறியதாம். ஆனால் இதற்கு இடையில் சிவகார்த்திகேயன் இந்த கதையை கேட்டு ஓகே கூறி தனது கால்ஷீட்டை ஒத்துக்கிவிட்டாராம்.