சிவகங்கையில் நடந்த சுவாரஸ்யம் – 1ம் வகுப்பு மாணவியின் நேர்மை! ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமனம்!!

0
சிவகங்கையில் நடந்த சுவாரஸ்யம் - 1ம் வகுப்பு மாணவியின் நேர்மை! ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமனம்!!
சிவகங்கையில் நடந்த சுவாரஸ்யம் - 1ம் வகுப்பு மாணவியின் நேர்மை! ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமனம்!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் தீப பிரபா என்ற மாணவி ஒரு நாள் தலைமை ஆசிரியராக அமர வைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதுக்கு அந்த பிராவே பரவாயில்ல போல., படு குட்டி உடையில் தோன்றி திளைக்க காட்டிய தமன்னா!

ஒரு நாள் தலைமை ஆசிரியர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள பர்மா காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிப்பவர் தீப பிரபா. இவர் நேற்று காலை தனது பள்ளி வகுப்பறைக்குள் கிடந்த 50 ரூபாயை எடுத்து வகுப்பாசிரியை ராமலட்சுமியிடம் ஒப்படைத்தார். மாணவியின் இந்த நேர்மையை பார்த்து வியந்த, ஆசிரியை சக மாணவர்கள் மத்தியில் நிற்க வைத்து கைதட்டல் மூலம் மாணவியை பாராட்டினார். இது போக, இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும் தெரிவித்தார்.

சிவகங்கையில் நடந்த சுவாரஸ்யம் - 1ம் வகுப்பு மாணவியின் நேர்மை! ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமனம்!!
சிவகங்கையில் நடந்த சுவாரஸ்யம் – 1ம் வகுப்பு மாணவியின் நேர்மை! ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமனம்!!

இதனை கேள்விப்பட்டு, மனம் நெகிழ்ந்த தலைமை ஆசிரியர் ஞானசேகர் தனது தலைமை ஆசிரியர் பணியை ஒரு நாள் முழுவதும் மாணவியிடத்தில் ஒப்படைத்து அவரை கெளரவ படுத்தியுள்ளார். தலைமை ஆசிரியர் நாற்காலியில் மாணவி அமர வைக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. இதனையடுத்து, பலரும் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here