டெல்லியில் கோர்மைகோசிஸ் என்ற கண் மற்றும் மூளையில் ஏற்படும் பூஞ்சைப் பாதிப்பை தடுக்க மருந்து தயாரிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பார்வை இழப்பு, மூளை பாதிப்பை தடுக்க மருந்து தயாரிக்க மத்திய அரசு ஆணை
மத்திய அரசு ஆணை:
டெல்லியில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையின் போது ஐசியூவில் சிகிச்சை பெறுவர்களுக்கு ஸ்டீராய்டு எனும் அதிக சக்தி வாய்ந்த மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு வெளிவருகின்றன.
அதன் விளைவாக இரு வாரங்களில் அவர்கள் கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் சர்க்கரை அளவு இந்த பூஞ்சை அதிகரிப்பதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலருக்கு இந்த பூஞ்சை தொற்று இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எதுவும் செய்வதில்லை. இந்த நிலையில், மியூகோர்மைகோசிஸ் பாதிப்பை குணப்படுத்தும் அம்ஃபோ டெரிசின்பி மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.