இந்திய ஆடவர் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி நேற்று (பிப்ரவரி 2) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இளம் வீரர் சுப்மன் கில் 46 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 34 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமல்லாமல் இந்திய ஆடுகளங்களில் கில் ஆடிய கடைசி 12 ஆட்டங்களில் தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து உள்ளார். இதனால் இவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடுவார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவர் தொடர்ந்து முக்கிய போட்டிகளில் சொதப்பி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே எதிர்வரும் போட்டிகளிலும் சொதப்பும் பட்சத்தில் அவருக்கு பதிலாக வேறு வீரரை களம் இறக்கலாம் என்று நெருக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை வாசிகளே.., இனி இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது.., வெளியான அறிவிப்பு!!!