2023 ODI உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று (நவம்பர் 15) மோதின. மிக சிறப்பாக அரங்கேறிய இப்போட்டியில், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு விராட் கோலி , முகமது ஷமி போன்ற வீரர்கள் தான் காரணம் என பலரும் கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
அதாவது நேற்றைய ஆட்டத்தில் 70 பந்துகளை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட (105 ரன்கள்) சதம் விளாசினார். மேலும் உலக கோப்பை 2019, T20 உலக கோப்பை 2021, 2022 போன்றவற்றை தவறவிட்டாலும் , நடப்பு உலக கோப்பைக்கு தேர்வாகி அதில் 500 ரன்களை முடித்துள்ளார். இதனால் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே இதேபோன்று எதிர்வரும் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு கோப்பையை வென்று தருவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.