இந்தியாவில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது மற்றும் பொது இடத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கான அபராத தொகையை உயர்த்துதல் என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.
புற்றுநோய் தடுப்பு..!
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களால் ஏற்படும் புற்றுநோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மேலும் 70% புற்றுநோய்கள் புகையிலையினால் தான் ஏற்படுகின்றன. ஆண்டுக்கு ஆண்டு புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சிகரெட்டில் நிக்கோடின் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் உள்ளன.
உயிரிழப்புகள் அதிகம்..!
உலகில் ஆண்டு தொடரும் 96 லட்சம் பேர் புற்றுநோயால் உயிர் இழக்கின்றனர். அதாவது ஒரு நிமிடத்திற்கு 17 உயிர் இழப்புகள் நிகழ்கின்றன. இதைத் தடுக்க அரசு என்ன தான் நடவடிக்கை மேற்கொண்டாலும் அதனால் பயனில்லை. எனவே இந்த சட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.
அபராதம் உயரும்..!
ஏற்கனவே உள்ள சட்டத்தின் படி இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை உள்ளது. இதனை 21 வயதாக உயர்த்தவும், மேலும் பொது இடத்தில் புகைப்பிடித்தால் வசூலிக்கப்படும் அபராத தொகையான ரூ. 200 ஐ உயர்த்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |