ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடரால் குழந்தைகளுக்கு கேன்சர் வரும் அபாயம் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு ரூ. 5,329 கோடி அபராதம் விதித்து உள்ளது.
பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ்..!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரால் கேன்சர் ஏற்படுவதாக 4 பேர் அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது கேன்சரை உருவாக்கும் அபாயம் உடையது. இந்த விபரங்கள் குறித்து வாடிக்கையாளர்களிடமும் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
மேலும் இது தொடர்பாக ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு எதிராக 16,000க்கும் அதிகமான சிவில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதனால் நியூ ஜெர்சி நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு 750 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 5,139 கோடி) அபராதம் விதித்து உள்ளது.
நிறுவனம் மறுப்பு..!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்த குற்றச்சாட்டை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மறுத்து உள்ளது. மேலும் இது குறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், தவறான தகவல்கள் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |