இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானம் செய்தது. அதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது.
ஓப்பனிங் சொதப்பல்..!
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரிதிவி ஷா மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். பிரிதிவி 24 ரன்களில் போல்ட் ஆனார்.
அகர்வாலும் 3 ரன்னில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லியும் 15 ரன்னில் சௌதி பந்தில் போல்ட் ஆக இந்திய அணி தத்தளித்து வருகிறது. இந்த முறையும் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுலும் 4 ரன்னில் போல்ட் ஆகி வெளியேறினார். ஜாதவ் 9 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஒருபுறம் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வந்த ஷ்ரேயஸ் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். தாகூர் 18 ரன்னில் போல்ட் ஆனார்.
நவதீப் சைனி நம்பிக்கை அளிக்கும் விதமாக 45 ரன்கள் அடித்தார். ஆனால் அவரும் நிலைக்கவில்லை. ஜடேஜா 55 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் நியூஸிலாந்து அணி 2 – 0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |