இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனாவால் 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தின் கொரோனா பாதிப்பு நிலவரத்தை பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்ப்போம்.

கொரோனா பரவல்

இந்தியா முழுவதும் கொரோனாவால் இதுவரை ஏராளமானோர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9,062 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,42,86,256 ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,36,54,064 ஆக அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக குணமடைந்தோர் விகிதம் 98.57% ஆக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,05,058 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து தொற்றால் புதிதாக 36 பேர் இறந்துள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,27,134 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 15,220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி ஒரே நாளில் 25,90,557 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2,08,57,15,251 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here