கொரோனாவால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி – ரூ. 5 லட்சம் கோடி இழப்பு..!

0

கொரோனா வைரஸினால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவு கடும் சரிவை சந்தித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.

வரலாறு காணாத சரிவு..!

இந்தியா பங்குச்சந்தையின் மதிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1515.01 புள்ளிகள் சரிந்து 36,061.61ஆகவும், நிப்டி 417.05 புள்ளிகள் சரிந்து 10,572.40 ஆகவும் இருந்தன. சென்செக்ஸ் 2200 புள்ளிகளும், நிப்டி 620 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.

எல்லாம் வீழ்ச்சி..!

கொரோனா வைரஸ் பாதிப்பாலும், கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி கண்டதாலும், இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் யெஸ் வங்கி சந்தித்துள்ள கடும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மும்பை பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10% வீழ்ச்சி அடைந்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here