கடை திறப்பு விழாவுக்கு சென்ற நடிகை ஷகிலாக்கு நேர்ந்த சோகம் – மிரண்டு ஓட்டம் பிடித்த நடிகை!

0
கடை திறப்பு விழாவுக்கு சென்ற நடிகை ஷகிலாக்கு நேர்ந்த சோகம் - மிரண்டு ஓட்டம் பிடித்த நடிகை!

திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்றை திறந்து வைக்க ஷகிலா சென்றிருந்த போது ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி தவித்து அவதிப்பட்டுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி படாதபாடு பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஷகிலா:

கவர்ச்சி படங்களில் நடித்ததன் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஷகிலா. கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும் அந்த மாதிரி படங்களில் நடித்து வந்ததால் மக்களின் மத்தியில் ஒதுக்கப்பட்டவராகவே இருந்து வந்தார். பின்னர் தான் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் தகர்த்தெறிந்தார். இவரது நல்ல உள்ளதை பார்த்து பலரும் தனது தாயை போலவே மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு யூடியூப் சேனல் ஒன்றையும் திறம்பட நடத்தி வருகிறார். தற்போது திருப்பத்தூரில் உள்ள உணவகம் ஒன்றை திறந்து வைக்க ஷகிலா சென்றிருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் செல்பி எடுக்க ஷகிலாவை சூழ்ந்து கொண்டனர். இதனால் அங்குள்ள பகுதி முழுவதுமே கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. பாதுகாவலர் உதவியுடன் அனைவரையும் தாண்டி ஷகிலா பாதுகாப்பாக காரிற்கு சென்றார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷகிலா பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shakeela (@_.shakeela.__)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here