விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் சம்யுக்தா மற்றும் விஷ்ணு.. மார்ச் மாதம் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்குள் அடுத்த ஒரே மாதத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது. இது குறித்து இருவரும் மாறி மாறி சோசியல் மீடியாவில் பதிவை போட்டு தங்களுக்குள் சண்டை போட்டு வந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் சிப்பிக்குள் முத்து சீரியலில் இவர்களுடன் நடித்திருந்த நடிகை ரிஹானா இவர்கள் இருவர் குறித்து சில விஷயங்களை வீடியோவில் பேசி பதிவிட்டுள்ளார். அதில் இவர் கூறியிருப்பது, நான் இதுவரை இவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன், விஷ்ணுகாந்த் ஒரு ஜென்டில்மேன், எந்த ஒரு பெண் நடிகைகளிடமும் அதிகமாக பேசிக் கொள்ள மாட்டார். மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்த இவர் பற்றி சம்யுக்தா தவறாக கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
TNPSC யின் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு., தவறவிடாதீங்க!!!
மேலும் சம்யுக்தா இவருடன் வெப் சீரிஸில் நடித்த ரவி பற்றி தவறாக கூறி அவரது பெயரையும் கெடுகிறார். ஆனால் என்னை பொறுத்தவரை சம்யுக்தா தான் கொஞ்சம் attitude காட்டுவார். இருவரும் காதலித்த கொஞ்ச நாளிலேயே விரைவாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இப்போது விவாகரத்து வரை சென்று இவர்கள் இனி எடுக்கும் முடிவை யோசித்து நிதானமாக எடுக்க வேண்டும். மேலும் எனக்கு தெரிந்தவரை சம்யுக்தா தான் விஷ்ணு மற்றும் ரவி ஆகியோர் மீது தேவையில்லாமல் குறை கூறுவதாக தோன்றுகிறது என கூறியுள்ளார்.