மலேசியா பெண்ணை ஏமாற்றிய நடிகர் அர்னவ்.., தகுந்த ஆதாரங்களுடன் பேசும் மனைவி!!

0
மலேசியா பெண்ணை ஏமாற்றிய நடிகர் அர்னவ்.., தகுந்த ஆதாரங்களுடன் பேசும் மனைவி!!
மலேசியா பெண்ணை ஏமாற்றிய நடிகர் அர்னவ்.., தகுந்த ஆதாரங்களுடன் பேசும் மனைவி!!

சின்னத்திரை நடிகர் அர்னவ் பணத்திற்காக பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என அவரது மனைவியும் சீரியல் நடிகையுமான திவ்யா ஸ்ரீதர் பகீர் புகார்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் அர்னவ் – திவ்யா ஸ்ரீதர்:

சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கன்னட நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது, அதே சீரியலில் ஹீரோவாக நடித்த அர்னவ் என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. இதனை தொடர்ந்து இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் கிட்டத்தட்ட 5 வருடங்கள் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து, கர்ப்பமாக உள்ள தகவலையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவியது. அதன் பின்னர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு, தன்னை அர்ணவ் அடித்து கொடுமை படுத்துவதாகவும், அவர் தன்னுடைய வயிற்றில் அடித்ததில் ப்ளீடிங் ஏற்பட்டு, குழந்தை கலையும் நிலையில் உள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். மேலும் அர்ணவ் தற்போது நடித்து வரும் சீரியலில் நடிக்கும் நடிகையுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதெல்லாம் பண்ணதால தான் நயன்தாராவுக்கு குழந்தை பிறக்கவில்லை.., பயில்வான் ரங்கநாதன் பளிச் பேட்டி!!

இதனை நடிகர் அர்னவ் மறுத்த நிலையில் தன்னுடைய குழந்தையை கலைப்பதற்காகவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தி வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் அர்னவ் மீது திவ்யா ஸ்ரீதர் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது நடிகர் அர்னவ் பணத்திற்காக பெண்களை ஏமாற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணை அர்னவ் காதலிப்பதாக கூறி அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதற்கான தக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று கூறி சின்ன திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here