நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தபால் நிலையத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக வட்டி வழங்கும் வகையில் “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000, அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 5 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு, காலாண்டு அடிப்படையில் 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் ரூ.12,30,000 வட்டி என ரூ.42,30,000 முதிர்வுத் தொகையைப் பெறலாம் என கூறப்படுகிறது.