பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான். கேரளாவை சொந்த ஊராக கொண்ட நடிகை ஷபானா தமிழில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ என்ற சீரியலில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த சீரியல் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றுத் தந்தது. குறிப்பாக, ‘செம்பருத்தி’ சீரியலின் கார்த்திக் – பார்வதி ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த சீரியல் சுமார் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பானது. சீரியல் முடிந்த கையோடு நடிகர் ஆர்யனை திருமணம் செய்து கொண்ட நடிகை ஷபானா நடிப்பதில் இருந்து சில காலம் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், நடிகை ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
நடிகை ஆண்ட்ரியாவின் ‘நோ என்ட்ரி’…,மிரட்டலாக வெளியான ட்ரைலர்….,
இந்த சீரியலுக்கு ‘ஜோடி’ என பெயரிட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், நடிகை ஷபானா நடிப்பில் தயாராகியுள்ள புதிய சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ‘மிஸ்டர் மனைவி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த புதிய சீரியலும் ரசிகர்களின் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.