நவ.2 முதல் மூன்று கட்டங்களாக பள்ளிகள் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு!!

0
schools-mask

நவம்பர் 2 முதல் மூன்று கட்டங்களாக ஆந்திர மாநில பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்து உள்ளார். முதல் நாளில் 9, 10ம் வகுப்புகளுக்கு பாடங்கள் எடுக்கப்படும் எனவும் 3 கட்டங்களாக பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக வரும் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இக்காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களையும் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. ஆனால் சில மாநிலங்கள் ஏற்கனவே பள்ளிகளை திறந்து வகுப்புகள் எடுக்க தொடங்கி விட்டன. தற்போது ஆந்திர மாநிலமும் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான கால அட்டவணையை ஆந்திர அரசு மாற்றம் செய்துள்ளது. தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி வெளியிட்ட புதிய அட்டவணையின்படி, நவம்பர் 2 முதல் கல்வி நிறுவனங்கள் மூன்று கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும். 9, 10 மற்றும் இடைநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 2 முதல் தொடங்கும். முன்னதாக, 1 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நவம்பர் 2 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் மாற்று நாட்களில் அரை நாள் மட்டுமே செயல்படும். 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கும். 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 14 முதல் தொடங்கும். இந்த அட்டவணை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா அச்சத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here