செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க தயார் – பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!! 

0
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இனி பயிற்சி வகுப்புகள் - அறிமுகமான முக்கிய திட்டம்!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட பள்ளிகள், தற்போது வரை முழுவதுமாக திறக்கவில்லை. ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை முடிவடையும் நிலையில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வி துறை முடிவெடுத்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்தாவது, செப்டம்பர் 1ந் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம் எனவும், பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு முதற்கட்டமாக சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் முதற்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்த ஏற்பாடு நடத்தப்பட உள்ளதாகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here