தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் 12ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இதனை கவனிக்காமல் விளையாடிய மாணவர்கள், எதிர்பாராத விதமாக பந்து தேனீக்கூடு மீது பட்டு கலைந்தது. இதன் காரணமாக பரவிய தேனீக்கள் 5 ஆசிரியர்களை கொட்டி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழைப்பொழிவு., வானிலை மையம் அறிவிப்பு!!!
இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த அரசு பள்ளிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனீக்களை அப்புறப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.