கோயம்புத்தூரில் வீட்டில் தினமும் பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டதால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
குடி குடியைக் கெடுக்கும்..!
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமார் – முல்லைக்கொடி. முத்துக்குமார் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும்-மகனும் உள்ளனர். கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டில் தினமும் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு இருந்தார். அவர்களது மகள் எவ்வளவு கூறியும் அவர்கள் கேட்காததால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |