இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலால் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசும் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொற்று பரவலை கருத்தில் கொண்டு 9 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 19 ஆம் தேதி முதல் நடக்க இருந்த திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கபடுவதாகவும் தமிழக அரசு தற்போது அதன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்