தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள், பிற இனத்தவர்களிடம் இருந்து நிலங்களை வாங்க இருந்தால், அவர்களுக்கு அந்த நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இருந்தாலும் மீதத்தொகை இல்லாமல் இருப்பினும், அவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் 6 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த அறிவிப்பு SC, ST விவசாயிகள் உட்பட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.