ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தங்கள் வாடிக்கையாளர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தவறினால் வங்கிச் சேவைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு தற்போது நிலவி வரும் ஊரடங்கால் ஜூன் 30 தேதி ஆம் தேதி வரை மக்கள் பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்க காலஅவகாசம் கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் இந்தியா ஜூன் 30க்குள் பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த நேரிடும் என்று வங்கி தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற இணைய முகவரியில் அல்லது 567678 என்ற எண்ணுக்கு UIDPAN 12 டிஜிட் ஆதார் எண் 10 டிஜிட் பான் எண்ணை டைப் செய்து எஸ்.எம்.எஸ். பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் மூலமாக அனுப்பியும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலாம்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!