மாயனிடம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒளிவுமறைவாக சொல்லும் மகா – உண்மை தெரியவருமா?? விறுவிறுப்பாகும் ‘நாம் இருவர் நமக்கிருவர்’!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலில் தான் கர்ப்பமான விஷயத்தை மாயனிடம் மகா சொல்வாரா?? மாட்டாரா?? என்பதே பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது.

நாம் இருவர் நமக்கிருவர்

நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் முன்பை விட தற்போது பல விறுவிறுப்பான காட்சிகள் நடந்து வருகிறது. மாயன் ஏமாற்றி தான் மகாவை திருமணம் செய்து கொண்டார் என்ற உண்மை தெரிந்ததும் மகாவின் அப்பா அவரை அழைத்து சென்று விட்டார்.

மேலும் மகாவிற்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் மகாவிற்கு இது சுத்தமாக பிடிக்கவும் இல்லை. மேலும் தான் மாசமாக இருப்பதை யாரிடம் சொல்வது என்று தவித்து கொண்டுள்ளார். மேலும் இதனை மகாவின் அம்மா கண்டுபிடித்து விடுகிறார்.

இப்படி குடும்பத்தையே அசிங்க படுத்திட்டியே என்று மகாவை அடிக்கிறார். வீட்டிற்கு வரும் மகா தன் அப்பாவிடம் வந்து ஏன் மாயனை இந்தளவுக்கு வெறுக்கிறீங்க என்று கேட்க தன் ஆதங்கத்தை கொட்டுகிறார்.

ஒரு குழந்தை பிறந்து அதன் பிறகு உண்மை தெரிந்திருந்தால் கண்டிப்பாக உயிரையே விட்டிருப்பேன் என்று சொல்கிறார். இதனால் மகாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இரவில் மாயனை சந்திக்க சென்ற மகா ஒளிவு மறைவாக குழந்தையை பற்றி சொல்கிறார். ஆனால் மாயனுக்கு எதுவும் புரியவில்லை. நல்ல சமயம் பார்த்து இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here