இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பெரும்பாலானோர் சவூதி அரேபியாவில் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக தங்கி இருந்து வருகின்றனர். இதற்கேற்ப வெளிநாட்டவர்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை சவுதி அரேபியா அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட அந்நாட்டில் முதல் மதுபானக் கடை திறக்க திட்டமிட்டுள்ளதாக இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சவுதி அரசு கூறுகையில், “முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்காக மதுபானக் கடை திறக்க முடிவு செய்துள்ளோம். இந்த வசதியை பெற விரும்புபவர்கள், வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்ற, மொபைல் ஆப் மூலம் பதிவு செய்ய வேண்டும்.” என்ற நிபந்தனையும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.