தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்காக நாளை (டிச.24) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மலை பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் டிசம்பர் 27 வரை 4 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மக்களே இனி கனமழைக்கு வாய்ப்பில்லை.., இது தான் நடக்கும்.., வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!!!