இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்காக ஆர்சிபி தங்களது அணிக்கு புதிதாக ஓர் பேட்டிங் ஆலோசகரை தேர்வு செய்துள்ளது. தற்போது அதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல்:
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான மினி ஏலம் வரும் 18ம் தேதி அன்று சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் காத்திருக்கின்றன. மேலும் 8 அணிகள் சேர்ந்து மொத்தமாக தங்களது அணியில் இருந்து 57 வீரர்களை விடுவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அணிகளும் தங்களது ஆலோசகரையும் மாற்றி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது ஆர்சிபி அணி தங்களது அணிக்கான பேட்டிங் ஆலோசகரை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் பேஸ்ட்மேன் சஞ்சய் பாங்கரை தேர்வு செய்துள்ளது. இவர் கடந்த 2014 முதல் 2019 உலக கோப்பை தொடர் வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை – ரூட் முன்னேற்றம்! பின்தங்கிய விராட் கோஹ்லி!!
மேலும் இவர் இந்திய அணிக்காக 12 டெஸ்ட், 15 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரயில்வே அணிக்காக முதல்தர போட்டிகளில் விளையாடி, மொத்தம் 8349 ரன்களும், 13 சதங்கள், 43 அரை சதங்களும் விளாசியுள்ளார். மேலும் 300 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.