இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை 2010ல் திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களுது திருமணத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த போதிலும் அதை எதிர்த்து இவர்கள் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தம்பதிக்கு 2018 ஆம் ஆண்டு இசான் மிர்சா மாலிக் என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இப்படி மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 3 மாதத்திற்கு முன் விவாகரத்தில் முடிந்துள்ளது.
இதையடுத்து சோயப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை காதலித்து கரம் பிடித்துள்ளார். இந்நிலையில் சோயப் மாலிக் – சனா ஜாவித் திருமணத்திற்கு பின் இருக்கும் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சனா ஜாவித்தை, சோயப் மாலிக் சந்தித்துள்ளார். இதன் பிறகு தான் இவர்களுக்குள் நெருங்கிய உறவு உருவாக்கியதாம். மனைவி இருக்கும் போதே சோயப் மாலிக், மற்றொரு பெண்ணுடன் உறவில் இருப்பதை சானியா கண்டித்துள்ளார். மேலும் சோயப் மாலிக்கின் குடும்பமும் அவரை கண்டித்துள்ளனர் . ஆனால் சோயப், சனா ஜாவித்துடன் இருக்கும் உறவை துண்டிக்கவில்லையாம். இதனால் தான் சானியா அவரது கணவரை விவாகரத்து செய்தாராம்.