மறுமணம் குறித்து வாய் திறந்த ரச்சிதா.., இன்ஸ்டாவில் போட்ட அதிரடி பதிவு.., அதிர்ந்துபோன நெட்டிசன்கள்!!!

0
மறுமணம் குறித்து வாய் திறந்த ரச்சிதா.., இன்ஸ்டாவில் போட்ட அதிரடி பதிவு.., அதிர்ந்துபோன நெட்டிசன்கள்!!!

சின்னத்திரையில் எக்கச்சக்க தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. இவர் சின்னத்திரை நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் இப்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு ஆதரவாக பல கமெண்ட்களை தினேஷ் பதிவிட்டு வந்தார்.

இதை தொடர்ந்து தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் இவருக்கும் விசித்ராவுக்கும் இடையே பல சண்டைகள் வந்தது. அப்போது ரச்சிதா விசித்ராவை ஆதரிக்கும் வகையில் பல கமெண்ட்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இன்று விசித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் எனக்கு நல்ல பல உறவுகள் கிடைத்துள்ளது. நாம் ஒவ்வொருவருக்கும் பல மாற்றங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அதை எதையும் வெளிக்காட்டாமல் அனைவரிடமும் அன்பை மட்டும் பகிர்வோம் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரட்சிதா மகாலட்சுமி ரச்சிதா அழுவது, கட்டிப்பிடிப்பது போன்ற இமோஜை பதிவிட்டுள்ளார்.

இதற்கு விசித்ரா இதுவும் கடந்து போகும் என பதிலளித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க தினேஷ் மீது உள்ள கோபத்தால் ரச்சிதா பிரபலமான இயக்குனர் ஒருவரை மறுமணம் செய்ய போக போவதாக தகவல்கள் தீயாய் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரச்சிதா இன்ஸ்டா பக்கத்தில் போலீஸ் கெட்டப்பில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக எனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது. கண்டதை எல்லாம் வைரல் ஆக்குவதை விட இதை வைரல் பண்ணுங்க என பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சானியா மிர்சா விவாகரத்து., வேறொரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு? லீக்கான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here