தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாக சைதன்யா – சமந்தா தம்பதி தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமந்தா மீது பல்வேறு யூடூயூப் சேனல்கள் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தன. அவருக்கு தவறான தொடர்பு இருப்பதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன.
இதனால் தன்னை தவறாக விமர்சித்த ஊடகங்கள் மீது மானநஷ்ட வழக்கு ஒன்றை சமந்தா தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமந்தாவின் சொந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்களை யாரும் சோசியல் மீடியாக்களில் பகிரக்கூடாது என உத்தரவிட்டார்.
ஏற்கனவே சமந்தா பற்றி சமூக வலைதளங்களில் உள்ள கருத்துக்களை நீக்கிவிட வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் சமந்தாவும் இனி தன் சொந்த விஷயங்களை சோசியல் மீடியாக்களில் பகிர வேண்டாம் என அறிவுரை வழங்கி உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்