மலையாள நடிகையான சாய்பல்லவி திரைப்படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்து ப்ரேமம் படத்தின் மூலம் மக்களிடையே அதிக புகழை பெற்றார். இந்நிலையில் தற்போது அவரின் திருமணத்தை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாய்பல்லவி
தமிழில் ‘தாம் தூம்’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார் சாய்பல்லவி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் அந்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாத இவர் ப்ரேமம் படத்தில் தனது நடிப்பின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இவரது சிவந்த கன்னத்தின் சிரிப்பிற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழில் தியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் மாரி 2, என்ஜிகே போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் மருத்துவ படிப்பை முடித்திருக்கும் சாய்பல்லவி திருச்சியில் Foreign Medical Graduate தேர்வு எழுதினார். இந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால் தற்போது அவரின் திருமணத்தை பற்றி அவர் கூறிய முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதாவது திருமணம் செய்து கொண்டால் பெற்றோரை பிரிய வேண்டி இருக்கும். எனவே நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேன் என கூறியுள்ளார். இந்த முடிவால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.