வங்கதேச ஆடவர் அணியானது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்ற இருந்தது. இவ்விரு அணிகள் மோதிய 2வது போட்டி நேற்று (டிசம்பர் 20) அரங்கேறியது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
முன்னதாக வங்கதேச அணியின் நட்சித்திர வீரர் சௌம்யா சர்கார் சிறப்பாக விளையாடி சாதனை படைத்து அசத்தினார். அதாவது 22 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 169(151) ரன்களை குவித்தார். இதன் விளைவாக நியூசிலாந்து மண்ணில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 14 வருட சாதனையை முறியடித்தார்.