கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது செகந்திராபாத் to கொல்லம் சிறப்பு ரயில் (07121) இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் வருகிற 14ஆம் தேதி பிற்பகல் 02.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டையம் வழியாக மறுநாள் இரவு 11.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக ஜன. 16ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கமலை கழட்டிவிட்ட கௌதமி.., எல்லாம் மகளை காப்பாற்ற தானாம்., அவரே சொன்ன பகீர் பதிவு இதோ!!