கமலை  கழட்டிவிட்ட கௌதமி.., எல்லாம் மகளை காப்பாற்ற தானாம்., அவரே சொன்ன பகீர் பதிவு இதோ!!

0
கமலை  கழட்டிவிட்ட கௌதமி.., எல்லாம் மகளை காப்பாற்ற தானாம்., அவரே சொன்ன பகீர் பதிவு இதோ!!
இந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் கௌதமி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எக்கச்சக்க மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். இப்படி திரையுலகில் பிஸியாக நடித்து வந்த இவர் சந்தீப் என்ற  தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.‌  இவருக்கு சுப்புலட்சுமி என்ற மகளும் உள்ளார். ஆனால்  கருத்து வேறுபாட்டால்  தனது முதல் கணவரை விவாகரத்து செய்த இவர் 2004 ஆம் ஆண்டு நடிகர் கமலுடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து கமலின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார். இப்படி இருக்கையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கமலுடன் இருந்த தனது பந்தத்தை 2016 ஆம் ஆண்டு முறித்துக் கொண்டார். மேலும், இதற்கான காரணம் குறித்து அவர் கூறியது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது கமல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் இவர் பணியாற்றியதற்கு சம்பள பாக்கி தர வேண்டி இருந்துள்ளது. இதற்கிடையில் தனக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரை காப்பாற்றும் கடமையும் தனக்கு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான்  கமலுடன் இருந்த தனது உறவையை முறித்துக் கொண்டேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here