சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்கு பூஜை நடைபெற்று வருவதால் அனுதினமும் 88,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கேரள தேவசம் போர்டு சரிவர மேற்கொள்ளாததால், பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது.
இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் தண்ணீர் வசதி கூட இல்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நாளொன்றுக்கு 80,000 பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உள்ளதாக தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் சன்னிதானத்திற்குள் சராசரியாக 3,800 முதல் 4,000 பக்தர்களை மட்டும் அனுமதிக்க போலீசார் இலக்கு வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே…, முன்கூட்டியே வழங்கப்படும் நிவாரணத் தொகை…., வெளியான முக்கிய தகவல்!!