தமிழக அரசானது, மிக்ஜாம் புயலால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்குவதாக அறிவித்திருந்தது. இதில், வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான சென்னையில் மட்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மற்ற மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான பகுதி வாழ் மக்களுக்கு மட்டும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக, டிசம்பர் 16 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்த நிலையில், வரும் நாளை (டிசம்பர் 14) முதல் டோக்கன்களை விநியோகிக்க முடிவு செய்ய எடுக்க உள்ளதாக என அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டிசம்பர் 16 ஆம் தேதி முதலே நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளலாம் என கருதப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இனியா சீரியல் விக்ரமின் மனைவி ஜெயிலர் பட நடிகையா?? அடேங்கப்பா.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!